Thursday, September 29, 2011

இதயம் பேசுகிறது 3





காதலியே!
உன் நினைவலைகளால் 
நிதானம் இழந்துவிட்டேன்...
வாழ்க்கையிலிருந்து மட்டும் அல்ல
வாகனத்திலும் தான்
108 உடன் வந்துவிடு


=================================================

என் விழிகளில் 
அவள் ஓவியமான பிறகு 
சாலையில் சக ஓட்டுனர்கள் என்னிடம்
கேட்டது
சொல்லி விட்டு வந்தாயா?
சொல்லி விட்டு வந்தாயா?
நான் இன்னும் சொல்லவில்லை.
விதியே நன் சொல்லும்வரையாவது
பொறுத்திரு!


==================================================


பெண்ணே ஒரு நிபந்தனை

என் எழுத்துக்களை
நீ வாசிக்கும் போது - எங்கு 
அழுகிறாயோ அங்கே 
நிறுத்துவிடு
நீ
அழுவதை அவைகளாலும்
தாங்க முடியாது.

====================================================

என் இதயம் வெண்மையானது
வலம்புரி சங்கை போல
காதில் வைத்துப்பார் உன் 
பெயர் மட்டுமே கேட்கும்


=======================================================


உன்னிடம் பேச எனக்கு
வார்த்தை வரவில்லை என்றேன்
என்னிடம் பேச வார்த்தைகளே 
இல்லை என்றாய் - போதும்
மொழியை தண்டிக்காதே 
உனக்கு தெரிந்ததை சொல்லிவிடு
"காதல் இல்லை என்று" 

=========================================================



Tuesday, February 22, 2011

இதயம் பேசுகிறது 2



மேகம் மண்ணைகேட்டு பொழிவதில்லை
மண்ணை பார்த்து பொழிகிறது
உன்னைகேட்டு காதல் பூக்கவில்லை
உன்னை பார்த்தவுடன் பூத்துவிட்டது......


--------------------------------------------------------------

நமக்குள் இருபது காதல் என்றேன்
நீ இல்லை என்றாய்
ஆ.... இது நியூட்டனின் மூன்றாம்விதி
அறிவியல் பைத்தியமே
இந்த காதல் பைத்தியத்தை கண்ணெடுத்துபார் 


-------------------------------------------------------------

என் கடந்தகாலம் நினைவில் இல்லை
எதிர்காலம் யோசிக்கவில்லை 
என் நிகழ்காலம் என்னோடு இல்லை
இல்லை ஏன் இல்லை 
நீ என்னோடு இல்லை

------------------------------------------------------------

நீ பார்க்காதபோது உயிர்
பறந்துவிட்டது
நீ பார்த்தபோது வந்துவிட்டது
உத்திரவாதம் இல்லாத பயணம் 
காதல்

-----------------------------------------------------------

என் இதயம் வாழத்துடிக்கவில்லை
வலியால்  துடிக்கிறது
கருணை கொண்டவளே - அதை
நிறுத்தியாவது விடு

-----------------------------------------------------------

புதிய பேனாவில் உன்பெயரை
எழுதிபார்பதில்லை என் காதல்
மை  தீரும்வரை உன்னைப்பற்றியே
எழுதுவது என் காதல்

----------------------------------------------------------

பெண்ணே பார்த்து நடைபழகு
உன் காலடியில் என் இதயம்

---------------------------------------------------------

என் இதயத்தில் நீ இருக்கிறாய்
சந்தேகமா?
உன் மின்சார கண்ணால்
ஊடுருவிப்பார்
உடைத்துப் பார்க்காதே...

-------------------------------------------------------

Friday, January 21, 2011

இதயம் பேசுகிறது 1



என் கண்களில் வழிந்தோடிய
நீருக்கு தெரியாது
காரணம் இன்னொரு
கண்கள்தான் என்று.

===================================

நீ எனக்கு இல்லை என்று தெரியாது
அப்படி இருந்தால் மெதுவாகவே தெரியட்டும்
தெரிந்தால்
என் காற்று மட்டும் அல்ல
கவிதை ஊற்றும் நின்றுவிடும்
தெரியும்வரையாவது என் தமிழுக்கு
நன்றி செலுத்துகிறேன்.

===================================

உண்பதற்கு முன்
உன் விரல்களுக்கு -  என் மடல்களுடன்
ஸ்பரிசம் வேண்டாம் - அவை
உணவின் ருசியை மாற்றிவிடும்
கண்ணீர் உப்பல்லவா!

====================================

என் கவிதை தொகுப்புகளைஎல்லாம்
உன் பாதையில் பரப்புகிறேன்
அதை மிதித்தாவது செல்
விலகி சென்றுவிடாதே

====================================

என் எழுத்துக்களை பார்த்து
கவிதை என்றான் நண்பன்
கிறுக்கல் என்றாய் நீ - அது
கண்ணீர்தான் என்றது காதல்.

=====================================

இறைவா என் கண்ணீரை
இனிப்பாக மாற்றிவிடு - என்
தேவதைக்கு இனிமேல்
இனிப்பை மட்டும் படைக்கிறேன்

=====================================

உனக்கு தெரியும் தெரியாது - என
ஆராய்ந்தால் நான் சொல்ல வந்ததை
சொல்ல முடியாமலே போய்விடும்
முதலில் சொல்லி விடுகிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்

=====================================

பெண்ணே உனக்கு கவிதைகள் பிடிக்காதா!?
ச்சே! பெண்ணே  பெண்ணுக்கு எதிரி

=====================================


Monday, January 17, 2011

இதயம் பேசுகிறது















என் கவிதைகளை  சுமந்த காகிதங்களும்
என்னை காதலிக்க தொடங்கிவிட்டன
உன்னை தவிர........


--------------------------------------------------------------------
உன்னால் கிழிக்கப்பட்ட என் கவிதைகள்
என்னுள் விதையாகி மரமாகி உன்னையே
காதலிக்க தூண்டுகிறது........

-------------------------------------------------------------------
என்னை ஒருமுறையாவது காதலித்துவிடு
என் காதலாவது வாழட்டும்
என் கல்லறையில்........

-------------------------------------------------------------------

சிசுவதை
என் கவிதைகளுக்கு தாயாகிய
நீயே அதை அழிப்பது

-------------------------------------------------------------------

உன்னை கண்டவுடன்
தமிழ் என்னை தழுவியது
உனக்காக ஏங்கும் பொழுது
தமிழ் என்னை இருகதழுவியது
பெண்ணே!
நீதான் தமிழ் வளர்ப்பவளோ?

------------------------------------------------------------------

நான் நதியாகி உன்னை காதலிக்கிறேன்
கடலே நீ தூரத்தில் இருக்கிறாய்
நீயே மழையாகி என்னை
உன்னிடம் சேர்த்துவிடு

-------------------------------------------------------------------

நீ யாரையாவது தண்டிக்கவேண்டும்
என்று நினைத்தால்
உன் கண்களை தண்டித்துவிடு
பாதிக்கப்பட்டவன் சொல்கிறேன்

-------------------------------------------------------------------