Friday, January 21, 2011

இதயம் பேசுகிறது 1



என் கண்களில் வழிந்தோடிய
நீருக்கு தெரியாது
காரணம் இன்னொரு
கண்கள்தான் என்று.

===================================

நீ எனக்கு இல்லை என்று தெரியாது
அப்படி இருந்தால் மெதுவாகவே தெரியட்டும்
தெரிந்தால்
என் காற்று மட்டும் அல்ல
கவிதை ஊற்றும் நின்றுவிடும்
தெரியும்வரையாவது என் தமிழுக்கு
நன்றி செலுத்துகிறேன்.

===================================

உண்பதற்கு முன்
உன் விரல்களுக்கு -  என் மடல்களுடன்
ஸ்பரிசம் வேண்டாம் - அவை
உணவின் ருசியை மாற்றிவிடும்
கண்ணீர் உப்பல்லவா!

====================================

என் கவிதை தொகுப்புகளைஎல்லாம்
உன் பாதையில் பரப்புகிறேன்
அதை மிதித்தாவது செல்
விலகி சென்றுவிடாதே

====================================

என் எழுத்துக்களை பார்த்து
கவிதை என்றான் நண்பன்
கிறுக்கல் என்றாய் நீ - அது
கண்ணீர்தான் என்றது காதல்.

=====================================

இறைவா என் கண்ணீரை
இனிப்பாக மாற்றிவிடு - என்
தேவதைக்கு இனிமேல்
இனிப்பை மட்டும் படைக்கிறேன்

=====================================

உனக்கு தெரியும் தெரியாது - என
ஆராய்ந்தால் நான் சொல்ல வந்ததை
சொல்ல முடியாமலே போய்விடும்
முதலில் சொல்லி விடுகிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்

=====================================

பெண்ணே உனக்கு கவிதைகள் பிடிக்காதா!?
ச்சே! பெண்ணே  பெண்ணுக்கு எதிரி

=====================================


Monday, January 17, 2011

இதயம் பேசுகிறது















என் கவிதைகளை  சுமந்த காகிதங்களும்
என்னை காதலிக்க தொடங்கிவிட்டன
உன்னை தவிர........


--------------------------------------------------------------------
உன்னால் கிழிக்கப்பட்ட என் கவிதைகள்
என்னுள் விதையாகி மரமாகி உன்னையே
காதலிக்க தூண்டுகிறது........

-------------------------------------------------------------------
என்னை ஒருமுறையாவது காதலித்துவிடு
என் காதலாவது வாழட்டும்
என் கல்லறையில்........

-------------------------------------------------------------------

சிசுவதை
என் கவிதைகளுக்கு தாயாகிய
நீயே அதை அழிப்பது

-------------------------------------------------------------------

உன்னை கண்டவுடன்
தமிழ் என்னை தழுவியது
உனக்காக ஏங்கும் பொழுது
தமிழ் என்னை இருகதழுவியது
பெண்ணே!
நீதான் தமிழ் வளர்ப்பவளோ?

------------------------------------------------------------------

நான் நதியாகி உன்னை காதலிக்கிறேன்
கடலே நீ தூரத்தில் இருக்கிறாய்
நீயே மழையாகி என்னை
உன்னிடம் சேர்த்துவிடு

-------------------------------------------------------------------

நீ யாரையாவது தண்டிக்கவேண்டும்
என்று நினைத்தால்
உன் கண்களை தண்டித்துவிடு
பாதிக்கப்பட்டவன் சொல்கிறேன்

-------------------------------------------------------------------