மண்ணை பார்த்து பொழிகிறது
உன்னைகேட்டு காதல் பூக்கவில்லை
உன்னை பார்த்தவுடன் பூத்துவிட்டது......
--------------------------------------------------------------
நமக்குள் இருபது காதல் என்றேன்
நீ இல்லை என்றாய்
ஆ.... இது நியூட்டனின் மூன்றாம்விதி
அறிவியல் பைத்தியமே
இந்த காதல் பைத்தியத்தை கண்ணெடுத்துபார்
-------------------------------------------------------------
என் கடந்தகாலம் நினைவில் இல்லை
எதிர்காலம் யோசிக்கவில்லை
என் நிகழ்காலம் என்னோடு இல்லை
இல்லை ஏன் இல்லை
நீ என்னோடு இல்லை
------------------------------------------------------------
நீ பார்க்காதபோது உயிர்
பறந்துவிட்டது
நீ பார்த்தபோது வந்துவிட்டது
உத்திரவாதம் இல்லாத பயணம்
காதல்
-----------------------------------------------------------
என் இதயம் வாழத்துடிக்கவில்லை
வலியால் துடிக்கிறது
கருணை கொண்டவளே - அதை
நிறுத்தியாவது விடு
-----------------------------------------------------------
புதிய பேனாவில் உன்பெயரை
எழுதிபார்பதில்லை என் காதல்
மை தீரும்வரை உன்னைப்பற்றியே
எழுதுவது என் காதல்
----------------------------------------------------------
பெண்ணே பார்த்து நடைபழகு
உன் காலடியில் என் இதயம்
---------------------------------------------------------
என் இதயத்தில் நீ இருக்கிறாய்
சந்தேகமா?
உன் மின்சார கண்ணால்
ஊடுருவிப்பார்
உடைத்துப் பார்க்காதே...
-------------------------------------------------------
No comments:
Post a Comment