Monday, January 17, 2011

இதயம் பேசுகிறது















என் கவிதைகளை  சுமந்த காகிதங்களும்
என்னை காதலிக்க தொடங்கிவிட்டன
உன்னை தவிர........


--------------------------------------------------------------------
உன்னால் கிழிக்கப்பட்ட என் கவிதைகள்
என்னுள் விதையாகி மரமாகி உன்னையே
காதலிக்க தூண்டுகிறது........

-------------------------------------------------------------------
என்னை ஒருமுறையாவது காதலித்துவிடு
என் காதலாவது வாழட்டும்
என் கல்லறையில்........

-------------------------------------------------------------------

சிசுவதை
என் கவிதைகளுக்கு தாயாகிய
நீயே அதை அழிப்பது

-------------------------------------------------------------------

உன்னை கண்டவுடன்
தமிழ் என்னை தழுவியது
உனக்காக ஏங்கும் பொழுது
தமிழ் என்னை இருகதழுவியது
பெண்ணே!
நீதான் தமிழ் வளர்ப்பவளோ?

------------------------------------------------------------------

நான் நதியாகி உன்னை காதலிக்கிறேன்
கடலே நீ தூரத்தில் இருக்கிறாய்
நீயே மழையாகி என்னை
உன்னிடம் சேர்த்துவிடு

-------------------------------------------------------------------

நீ யாரையாவது தண்டிக்கவேண்டும்
என்று நினைத்தால்
உன் கண்களை தண்டித்துவிடு
பாதிக்கப்பட்டவன் சொல்கிறேன்

-------------------------------------------------------------------

3 comments:

  1. ஒவ்வொரு கவிதைகளிலும் எதிர்பார்த்து காத்திருக்கும் காதல் கசிகிறது அருமை

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. Aree avaru Kavingaraave maarittaru....

    Kavitha.......Kavitha!!!

    All of your kavithai's(verses) are very good..especially 1st & Last are too cute.

    ReplyDelete