என் கண்களில் வழிந்தோடிய
நீருக்கு தெரியாது
காரணம் இன்னொரு
கண்கள்தான் என்று.
===================================
நீ எனக்கு இல்லை என்று தெரியாது
அப்படி இருந்தால் மெதுவாகவே தெரியட்டும்
தெரிந்தால்
என் காற்று மட்டும் அல்ல
கவிதை ஊற்றும் நின்றுவிடும்
தெரியும்வரையாவது என் தமிழுக்கு
நன்றி செலுத்துகிறேன்.
===================================
உண்பதற்கு முன்
உன் விரல்களுக்கு - என் மடல்களுடன்
ஸ்பரிசம் வேண்டாம் - அவை
உணவின் ருசியை மாற்றிவிடும்
கண்ணீர் உப்பல்லவா!
====================================
என் கவிதை தொகுப்புகளைஎல்லாம்
உன் பாதையில் பரப்புகிறேன்
அதை மிதித்தாவது செல்
விலகி சென்றுவிடாதே
====================================
என் எழுத்துக்களை பார்த்து
கவிதை என்றான் நண்பன்
கிறுக்கல் என்றாய் நீ - அது
கண்ணீர்தான் என்றது காதல்.
=====================================
இறைவா என் கண்ணீரை
இனிப்பாக மாற்றிவிடு - என்
தேவதைக்கு இனிமேல்
இனிப்பை மட்டும் படைக்கிறேன்
=====================================
உனக்கு தெரியும் தெரியாது - என
ஆராய்ந்தால் நான் சொல்ல வந்ததை
சொல்ல முடியாமலே போய்விடும்
முதலில் சொல்லி விடுகிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
=====================================
பெண்ணே உனக்கு கவிதைகள் பிடிக்காதா!?
ச்சே! பெண்ணே பெண்ணுக்கு எதிரி
=====================================
No comments:
Post a Comment