Thursday, September 29, 2011

இதயம் பேசுகிறது 3





காதலியே!
உன் நினைவலைகளால் 
நிதானம் இழந்துவிட்டேன்...
வாழ்க்கையிலிருந்து மட்டும் அல்ல
வாகனத்திலும் தான்
108 உடன் வந்துவிடு


=================================================

என் விழிகளில் 
அவள் ஓவியமான பிறகு 
சாலையில் சக ஓட்டுனர்கள் என்னிடம்
கேட்டது
சொல்லி விட்டு வந்தாயா?
சொல்லி விட்டு வந்தாயா?
நான் இன்னும் சொல்லவில்லை.
விதியே நன் சொல்லும்வரையாவது
பொறுத்திரு!


==================================================


பெண்ணே ஒரு நிபந்தனை

என் எழுத்துக்களை
நீ வாசிக்கும் போது - எங்கு 
அழுகிறாயோ அங்கே 
நிறுத்துவிடு
நீ
அழுவதை அவைகளாலும்
தாங்க முடியாது.

====================================================

என் இதயம் வெண்மையானது
வலம்புரி சங்கை போல
காதில் வைத்துப்பார் உன் 
பெயர் மட்டுமே கேட்கும்


=======================================================


உன்னிடம் பேச எனக்கு
வார்த்தை வரவில்லை என்றேன்
என்னிடம் பேச வார்த்தைகளே 
இல்லை என்றாய் - போதும்
மொழியை தண்டிக்காதே 
உனக்கு தெரிந்ததை சொல்லிவிடு
"காதல் இல்லை என்று" 

=========================================================



No comments:

Post a Comment